பக்கங்கள்

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

நிகழ்வுகளோடு ஒரு போராட்டம்

 


இங்கே பல நிகழ்வுகள் என்னை 

கடந்து செல்கிறது..

சில நிகழ்வுகள் வலுக்கட்டாயமாக

என்னை வம்புக்கு இழுத்து 

வேடிக்கைப் பார்த்து 

சிரிக்கிறது..

நான் அதை எல்லாம் 

புறம் தள்ளி விட்டு 

பயணிக்கும் போது

எனக்கு சம்பந்தமே இல்லாத

அந்த நிகழ்வு  என்னை

ஒரு நிழல் போல தொடர்கிறது...

இத்தனை நிகழ்வுகளும் 

தேவையே இல்லை 

எனது வாழ்விற்கு....

ஒரேயொரு நிகழ்வு மட்டுமே

போதும்..

அது நான் இருக்கிறேன் என்பதே...

மற்றபடி என்னை சுற்றி நடக்கும்

நிகழ்வுகள் எல்லாமே

வெறும் சச்சரவுகளே...

எனக்கு துளியும் தேவைப்படாத

அந்த நிகழ்வுகளை

ஒரு குப்பையை போல 

அகற்ற நான் படும் பாட்டை

இங்கே யார் அறியக் கூடும்?

#இளையவேணிகிருஷ்ணா.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக