பக்கங்கள்

சனி, 8 ஏப்ரல், 2023

அந்த ☔ குடை படுத்தும் பாடு

 


அந்த கொட்டும் மழை நாளில்

நீ கொடுத்த குடையொன்று

இங்கே உன்னை 

ஞாபகப்படுத்திக் கொல்கிறது..

அதை என்னிடம் இருந்து

மீட்டு சென்று விடு...

அந்த குடையை 

காண நேரும் போதெல்லாம் 

காயமடைகிறது

என் காதல் மனது...☔ 

உன் நினைவை விட 

அதிகமாக என்னை

கொன்று தின்று தீர்க்கும்

குடையை மீட்க எப்போது

நீ வருவாய்???

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக