பக்கங்கள்

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

நான் யார்?

 

அங்கே கூட்டம் கூட்டமாக

யாரோ பலபேர்

என்னை நேசிக்கிறார்கள்..

அதே விகிதத்தில் கூட்டம் கூட்டமாக

என்னை வெறுக்கிறார்கள்..

இங்கே இந்த 

இருவித கூட்டங்களிலும் சிக்காமல்

வெகுதொலைவில் பயணிக்கிறேன்...

அதை கண்டு அங்கே

சில பேர் வியக்கிறார்கள்....

காலதேவனின் கைகளில் கூட 

சிறையாகாமல் 

பயணிக்கும் என்னை

கண் இமைக்காமல் பார்க்கும் கூட்டத்தை

சிறு சலனமும் இல்லாமல்

கடக்கிறேன்...

நான் யார் என்று

என்னை நானே வியந்தபடி...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக