பக்கங்கள்

திங்கள், 17 ஏப்ரல், 2023

இரவு கவிதை 🍁

 


விடியும் வேளையில்

 சாப்பாட்டிற்கு

வழி இல்லை...

அது பற்றி கொஞ்சமும்

கவலை இல்லாமல்

உனது வழக்கமான பணிகளில்

நிதானமாக செயல்படுகிறாயே

எப்படி இது சாத்தியம் என்றது காலம்

எனக்கு எனது பணிகள் முடிந்ததும்

அடுத்த தேவை உறக்கம்...

அது இதோ இன்னும் சற்று நேரத்தில்

பிரியமாக என்னை தழுவ

காத்திருக்கிறது என்றேன்...

காலம் புரிந்துக் கொண்டு

தன் தலையில் செல்லமாக 

அடித்துக் கொண்டு 

என்னை கடந்து சென்றது...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக