பக்கங்கள்

சனி, 1 ஏப்ரல், 2023

டாஸ்மாக் அலப்பறைகள்

 


இன்றைய தலையங்கம்:- தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பக்கம் டாஸ்மாக் ஏற்கெனவே உள்ளது.. அதற்கு எதிர் திசையில் இன்னொரு டாஸ்மாக் திறந்து இருப்பதை பார்த்து ஆச்சரியம் நமக்கு.. அதுதான் அந்த பக்கம் ஒரு டாஸ்மாக் இருக்கிறதே பிறகு ஏன் இந்த பக்கம் எதிர் திசையில் இன்னொன்று என்று கேட்டால் அதற்கு டாஸ்மாக் நிர்வாகம் சாலையை கடந்து இந்த பக்கம் மதுபிரியர்கள் ஆர்வ கோளாறில் சாலையை கடந்து வரும் போது விபத்தில் சிக்கி இறந்து விடக் கூடாது என்று தான் என்று பொறுப்பாக பதில் அளித்தார்கள்... எனக்கு தலையே சுற்றி விட்டது... ஆமாம் நெடுஞ்சாலையில் டாஸ்மாக் திறப்பதே தவறு.. அதில் நேர் எதிரே இரண்டு டாஸ்மாக்..அதை கேட்டால் விபத்தை தவிர்க்க தான் என்று சொல்கிறார்கள்..

நான் அந்த மதுபிரியர்கள் சார்பாக கேட்கிறேன்... இப்படி நடந்து விட்டால்.. அதாவது இந்த கடையில் சரக்கு வாங்கி குடித்து விட்டு இந்த டாஸ்மாக் கடையில் வாங்கிய சரக்கு போதை சரியாக ஏறவில்லை என்று சாலையை கடந்து எதிர் திசையில் நல்ல போதையில் கடந்து அந்த டாஸ்மாக் கடைக்கு சென்றால் விபத்து ஏற்படாதா? இங்கே மதுபிரியர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லையே.. மேலும் அவர்கள் வருமானத்தில் தான் அரசு அதிகாரிகள் ஊதியம் வேறு வழங்கப்படுகிறது...இதை பற்றி கொஞ்சம் அக்கறையோடு அரசாங்கம் சிந்தித்து மதுபிரியர்களின் உயிரை காப்பாற்றும்படி கேட்டுக் கொள்கிறோம்...

#இன்றையதலையங்கம்.

#மதுபிரியரின் மீது அக்கறை கொண்ட சாதாரண குடிமகன்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக