பக்கங்கள்

ஞாயிறு, 5 மார்ச், 2023

தன்னிரக்கம்

 

அந்த வெற்றுச் சாலையில்

பயணிக்கிறேன்...

வாழ்வின் கடும் போராட்டம்

சொல்லி சொல்லி

அலுத்து விட்டது எனக்கு...

என்னை பற்றி இங்கே

சொல்லி தீர்க்கும் நேரத்தில்

அவர்கள் அதை உள்ளுக்குள்

கொண்டாடி தீர்க்கிறார்கள்..

தன்னிரக்கம் கூடாது என்று

அங்கே என் கதையை

கேட்டவர்கள் சொல்லிக் கொண்டு 

இருக்கும்போதே

நான் அதே தன்னிரக்கத்தை

துணைக் கொண்டு பயணிக்கிறேன்...

இன்னும் கொஞ்ச காலத்தில்

அதற்கும் எனக்கும்

ஒரு புரிதல் கூட

இருக்க வாய்ப்பு உள்ளது...

சில அற்ப மானிடர்கள்..

அதை என்னிடம் இருந்து

வலுக்கட்டாயமாக பிரிக்க 

முயல்கிறார்கள்...

நான் அவர்களிடம் கேட்பது

ஒன்றேயொன்று தான்...

என்னையும் என் மீது 

தீராத பாசம் கொண்ட 

அந்த தன்னிரக்கத்தையும் 

பிரித்து விடாதீர்கள்...

நான் ஒற்றை ஆளாக 

பயணிப்பதில் உங்களுக்கு

என்ன அற்ப சுகம் அதில்?

#இளையவேணிகிருஷ்ணா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக