பக்கங்கள்

சனி, 3 டிசம்பர், 2022

நானும் சில மனிதர்களும்


அங்கே உனது

வாழ்வின் பயணத்தில்

அத்தனை சலசலப்புகள்

நடக்கிறது

நீயோ கொஞ்சமும் கவலை இல்லாமல்

இந்த தேநீரை நிதானமாக

பருகிக் கொண்டு

இருக்கிறாய் என்கிறார்கள்..

அப்படியா

அதிருக்கட்டும்

உங்கள் அத்தனை பேரின்

கைகளாலும்

ஒவ்வொரு கோப்பை தேநீர்

கொடுக்க முடியுமா என்கிறேன் நான்...

அவர்கள் ஏதோ ஒரு

அதிசய பிறவியை

கண்டது போல

மேலும் கீழும் ஆச்சரியமாக

பார்த்து விட்டு

செல்கிறார்கள்

நான் கேட்ட தேநீர் கோப்பையை

எனது கரங்களில் திணித்து விட்டு போங்கள் என்று

சத்தமிடுகிறேன்..

இன்னும் வேகமாக ஓடுகிறார்கள்

என்னை விட்டு விலகி

அந்த இரக்கமற்ற மனிதர்கள்

என்ன உலகமிது என்று

நான் போய் நிதானமாக

இன்னொரு கோப்பை தேநீர்

தயாரித்து பருகுகிறேன்..

காலியான முதல் தேநீர் 

கோப்பையின் அடியில்

தங்கும் அந்த தேநீர் துளியில் 

எனது சலனத்தை

புதைத்து...

#நானும்தேநீர்கோப்பையும்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக