பக்கங்கள்

சனி, 3 டிசம்பர், 2022

தென்றலும் நானும்

 

இயற்கையின் பேரமைதியில் களித்து

உறவாட எண்ணம் இல்லாமல் ஆள் அரவமற்று வெறிச்சோடி கிடக்கிறது

இந்த மண் சாலை..

வெற்று சாலையின்

பயணத்தில் நான் இணைந்துக் கொண்டு

பயணிக்கிறேன்

சுகமான தென்றலெனும்

தோழமை வழி எங்கும்

எனை தழுவிய படியே

வந்தது..

ஏன் இந்த தன்னந்தனி பயணம் என்று

எனை பார்த்து தென்றல்

கேட்ட போது வறட்சியான

சிரிப்போடு சொன்னேன்

இங்கே நீ என்னோடு தானே

பயணிக்கிறாய்...

உன் துணையன்றி இங்கே

வேறு எந்த துணையும்

இங்கே என் பயணத்தில்

அமைதியை தராது

தென்றலே...

இன்னும் கொஞ்சம்

எனை காதலோடு அணைத்துக் கொள்...

நம் இருவரின் நெருக்கத்தை

இங்கே எவரும் விமர்சிக்க

முடியாது என்றேன்..

கலகலவென சிரித்து..

அதுவும் சரிதான் என்று

மேலும் எனை சூட்சமமாக

அணைத்து என்னோடு

பயணிக்கும் இந்த தென்றலை

சூட்சமமாக நான் நேசிப்பதை

இங்கே எவர்

தடுக்கக் கூடும்...

#தென்றலும்நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக