பக்கங்கள்

வியாழன், 22 டிசம்பர், 2022

நீங்களும் நானும்

 

நான் இங்கே

உங்களை விட்டு

தள்ளியே பயணிக்கிறேன்

அத்தனை சஞ்சலங்களோடும்

என்னை ஒப்பிட்டு பேசுகிறீர்கள்..

அத்தனையும் செவி மடுத்து

மௌனமாக வேடிக்கை பார்க்கிறேன்..

உங்களோடு ஒப்பிடும்போது

நான் இங்கே வாழ்வின் ரசனையில் 

மெருகேறுகிறேன்...

நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக 

பொலிவிழக்கிறீர்கள்..

அதை கூட உணராமல்

பயணிக்கிறீர்கள்...

நான் அதையும் சேர்த்து

உங்களுக்கு எந்த அறிவுரையும் சொல்லாமல்

வாய் பொத்தி வேடிக்கை

பார்க்கிறேன்...

நீங்கள் மாயையின் பயணத்தில் பயணியுங்கள்..

பயணித்துக் கொண்டே

இருங்கள்...

நானும் உங்களை 

சலனம் இல்லாமல் 

வேடிக்கை மட்டுமே 

பார்த்துக் கொண்டே

இருப்பேன்...

வாழ்வின் ரசனையை

இங்கே என்னை தவிர

யாரும் அறிந்திருக்க நியாயமில்லை...

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக