பக்கங்கள்

சனி, 3 டிசம்பர், 2022

இங்கே எதுவும் எச்சங்கள் இல்லை

 

இங்கே எதுவும்

எச்சங்கள் இல்லை

ஒன்றின் எச்சம்

இன்னொன்றுக்கு உயிரோட்டம்...

வாழ்வின் சுவையோ

இங்கே எவரும் அறியவில்லை..

அதன் சுவையை

அறியாமலேயே

தனித்து விடப்படுவதில்

என்ன நியாயம் என்றும்

தெரியவில்லை..

ஒரு நிகழ்வின் சுவையை

முழுமையாக உணர்வதற்குள்

அந்த சுவையை காயப்படுத்தி விட்டு

அடுத்த சுவைக்குள்

ஊடுருவி செல்லும்

தங்கள் செயலை

நினைத்தால் சிரிப்பு தான்

வருகிறது என்று

நான் சொல்லவில்லை

அதோ அங்கே உங்களோடு

பயணிக்கும் காலம்

சொல்கிறது...

உங்கள் செவிகளுக்கு

எட்டவில்லை எனில்

அடுத்த முறை

அது ஏதேனும் எப்போது வேண்டுமானாலும்

சொல்லக் கூடும்..

தங்கள் செவிகளை

கடன் கொடுங்கள்

அதை கேட்பதற்காக...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக