பக்கங்கள்

சனி, 24 டிசம்பர், 2022

சுமைதாங்கியின் கண்ணீர்

 

அந்த சுமைதாங்கிகளுக்கும் வேண்டும் 

கொஞ்சம் ஆசுவாசம்..

இதை உணராமல்

போவோர் வருவோர்

அதன் மீது சுமையை இறக்கி

ஆசுவாசப்படுத்திக் கொண்டு

தனது பயணத்தை

கவலை இல்லாமல் தொடர்கிறார்கள்..

சுமைதாங்கியோ மௌனமாக

கண்ணீர் வடிக்கிறது...

கொஞ்சம் சத்தமும் கேட்டால்

ஆறுதல் தேடுபவர்கள்

ஆதங்கப்பட்டு விடுவார்களே என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

2 கருத்துகள்: