பக்கங்கள்

வியாழன், 22 டிசம்பர், 2022

அந்தி நேர தென்றல் காற்று


 இதமான

இந்த மாலை வேளையில்

உன் காதலின்

உணர்வு பெருக்கில்

களித்திருப்பதை பார்த்து

அந்த தென்றலும் கொஞ்சம்

பொறாமையாக

என்னை சீண்டி விட்டு

காணாமல் போனது..

நானோ அதை மீண்டும்

இழுத்து

ஒரு காதல் கடிதத்தை

தூதாக பறக்க விட்டேன்... 

வந்ததா

தூது அனுப்பி வை

அதே அந்தி நேர தென்றலை

என் ஆருயிரே...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக