பக்கங்கள்

வியாழன், 15 டிசம்பர், 2022

கிருஷ்ணர் உணர்த்தும் தத்துவம்

 

மார்கழி மஹா உற்சவம்:-

நமது பாகவதத்தில் ஒரு நிகழ்வு வரும்.அதாவது கோவர்த்தன மலைக்கு பூசை செய்ய சொல்வார் கிருஷ்ணர்.. இந்திரனுக்கு பூசை செய்ய தேவையில்லை.. இந்த கோவர்த்தன பர்வதம் தான் நமது பசு கூட்டங்களுக்கு அடைக்கலம் கொடுத்து பசியாற்றியது.. இந்திரனின் செயல் ஒன்றும் கோபியர்களை காப்பாற்றவில்லை.. அதனால் கோவர்த்தன மலையை பூசை செய்யுங்கள் என்று சொல்வார்.கோபியர்கள் தயக்கத்துடன் தான் அந்த பூசையை மேற்கொள்வார்கள்.. பிறகு இந்திரன் கோபம் கொண்டு ஏழு நாட்கள் விடாமல் மழை பொழிந்து நிறைய துன்பங்களை கொடுத்தாலும் கிருஷ்ணர் காப்பாற்றுவார் என்று தான் அந்த நிகழ்வு போகும்..

சரி இந்த நிகழ்வை பற்றி இங்கே தற்போது ஏன் கூறுகின்றேன் என்றால் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் #இயற்கையை #நேசியுங்கள்;இயற்கையை புறந்தள்ளி விட்டு நீங்கள் எவ்வளவு பெரிய பூசையை நடத்தினாலும் அது ஒன்றும் பயன்படாது.. என்கின்ற தத்துவத்தை தான் அங்கே நிரூபிக்கிறார்..

ஆனால் தற்போது உலகில் என்ன நடக்கிறது..மூட பக்தி அதாவது பகுத்தறிதல் இல்லாத பக்தி பூசைகள் பெருகி விட்டது.. இப்படி நடத்தும் பூசைகளால் இந்த பிரபஞ்சம் எந்த விதத்திலும் காப்பாற்றப்பட போவதில்லை என்பதை அன்றே #கிருஷ்ணர் சூட்சமமாக சொல்லி இருக்கிறார்..

#கிருஷ்ணர்உணர்த்தும்தத்துவம்

#இளையவேணிகிருஷ்ணா.

#மார்கழிமஹாஉற்சவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக