பக்கங்கள்

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

நினைவஞ்சலி

 

எத்தனை தடைகளை

தாண்டியும்

நீ பெண்ணாக அரசியலில்

பிரகாசித்தாய்...

இன்னும் எவ்வளவோ

விசயங்கள் நீ செய்து முடிக்க

இங்கே இருந்தது...

உனக்குள் ஏதோவொரு

ரகசியம் புதைந்து கிடந்ததை

இங்கே யார் அறியக் கூடும்?

உன் பெயருக்காக

உன் முகத்திற்காக

உன் தைரியமான பேச்சுக்காக

யாரோ ஒருவர் 

ஓட்டு அறுவடை செய்து 

மகிழ்ந்திருக்க...

நீ பகடைகாயாக...

நான் உணர்கிறேன்

இப்போது

நீ இல்லாத இந்த தமிழகம்

ஏதோவொரு ஒரு வெறுமையை 

தாங்கி

அரசியல் பயணம் செய்கிறது...

உன் ஆளுமையை இங்கே

எவரும் குறைத்து சொல்ல முடியாது...

நீ இன்னும் கொஞ்சம்

தைரியமாக துணிந்து

பல காரியங்களை நடத்தி

இருந்தால்

இந்த தமிழகம் 

ஒரு இரும்பு பெண்மணியை 

பெற்றது என்ற பெருமை கொண்டு 

இருக்கும்...

முதன் முதலாக உனக்கு ஒரு

நினைவஞ்சலி கவிதை

எழுதுகிறேன்

நினைவு நாளாக அறிவிக்கப்பட்டு இன்று...

#நினைவஞ்சலி

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக