பக்கங்கள்

சனி, 19 நவம்பர், 2022

Unfriend day

 


இன்றைய தலையங்கம்:- ஏதோ unfriend day என்று நவம்பர் 17அன்று கொண்டாடப்படுகிறது என்று செய்தி.. தற்போது இதை பற்றி இந்த இணையத்தளம் வந்த பிறகு தான் ஏற்பட்டு இருக்கிறது..இதை பற்றி பேசும் போது நான் பள்ளியில் ஒரு ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது என்னோடு ஒரு படித்த ஒரு தோழி ஒரு பொய் சொன்னதற்காக அப்போதே நான் unfriend செய்து இருக்கிறேன்... அந்த தோழி ஒரேயொரு சின்ன விசயத்திற்கு தான் பொய் சொன்னாள்.. ஆனால் நான் பல மாதங்கள் பேசாமல் இருந்தேன்.. அதை நினைத்து அந்த தோழி அழுதே விட்டாள்.பிறகு எனது சக தோழிகள் என்னிடம் சமாதானம் பேசி என்னை அந்த தோழியிடம் பேச வைத்தார்கள்.. நான் முதன் முதலில் unfriend செய்தது அந்த தோழியை தான்.. ஆனால் இப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பு வருகிறது.. 😊

இப்போது கூட அந்த தோழியை நினைக்க நேரும் போது மனதிற்குள் மன்னிப்பு கேட்டுக் கொள்வேன்.

இதை ஏன் இங்கே பதிவு செய்கிறேன் என்றால் இங்கே நாம் எப்படி நடந்துக் கொள்கிறோமோ அப்படி தான் நம்மை சுற்றி நமது நட்புகள் அமையும்.நாம் நல்ல அதிர்வலையோடு முடிந்த வரை எல்லோருடனும் இணக்கமாக செல்வோம்.. இந்த பரந்த உலகத்தில் எவரும் இங்கே பகை வேண்டாம்..சக நாடுகளுக்கும் இது பொருந்தும்..

எதற்காக unfriend day? யோசியுங்கள்..

#நண்பரல்ல

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக