பக்கங்கள்

வெள்ளி, 18 நவம்பர், 2022

சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துக்கள் 💐


 சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துக்கள் 💐

என்னடா இது ஒரு நாளும் ஒரு தினத்தையும் கொண்டாடி வாழ்த்து சொல்லாதவர் இன்று சொல்கிறாரே என்று கூட நீங்கள் யோசிக்கலாம்.. இதற்கு நிறைய காரணங்கள் உள்ளது.. ஒரு பெண்ணை ஒரு ஆண் ஏமாற்றி விட்டான் என்று சொன்னவுடனேயே அங்கே எந்த கேள்வியும் எழாமல் அந்த ஆண் தண்டிக்கப்படுகிறான்.. எந்தவித கருத்துக்களையும் சொல்ல விடாமலேயே...பல ஆண்கள் பெண்களை ஏமாற்றி பிழைக்க வேண்டும் என்று நினைக்கலாம்.. ஆனால் அங்கே நேர்மையான ஆணையும் ஏன் தண்டிக்க வேண்டும்...

மேலும் அன்று சென்னையில் பேருந்து பயணத்தில் எனது சகோதரி பயணித்து இருக்கிறார்கள்.. அங்கே பேருந்து நிலையத்தில் அந்த பேருந்து நிறுத்தப்படவில்லை.அதற்கு அங்கே எந்த பயணியும் கை நீட்டவில்லை..பேருந்தை நிறுத்த சொல்லி.. அங்கே ஒரு பெண் அந்த பேருந்தை துரத்தி வருகிறார்.பார்த்து விட்டு நடத்துநர் நிறுத்த சொல்லி இருக்கிறார் ஓட்டுநரிடம்.அவர் நிறுத்தியவுடன் அந்த பேருந்தில் ஏறிய அந்த பெண் பயணி ஓட்டுநர் நடத்துநரை பார்த்து மிகவும் கடுமையான சொற்களால் வசைப் பாடி இருக்கிறார்.. உங்களுக்கு பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதால் மதிக்க மாட்டீர்களா அவமானம் செய்வீர்களா என்று.. இன்னும் இன்னும் அச்சில் ஏற்ற முடியாத சொற்கள்.. ரிப்போர்ட் அடித்து விடுவேன் என்று மிரட்டல் வேறு.. பேருந்தில் பயணம் செய்தவர்கள் எவரும் இந்த சண்டையை கண்டுக் கொள்ளவில்லை.நமக்கேன் வம்பு..அதுவும் சண்டை போடுபவர் பெண் வேறு..🤦 இதை கவனித்த சகோதரி நீங்கள் பேருந்தை நிறுத்த சொல்லி கை காட்டவில்லை.. நானும் கவனித்தேன் என்று சொல்லி இருக்கிறார்.ஆனால் அவர் சகோதரியை அடக்கி விட்டு ரிப்போர்ட் செய்வதிலேயே குறியாக இருந்து இருக்கிறார்.பொறுத்து பொறுத்து பார்த்த எனது சகோதரி.. உடனே அவரிடம் கடுமையாக பேசி இருக்கிறார்.. நீங்கள் மனசாட்சி படி நடந்து கொள்ளுங்கள்.. நீங்கள் இந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநருக்கு செய்யாத தவறுக்காக ரிப்போர்ட் அடிக்க எவ்வளவு நேரம் பிடிக்கும்.. அதற்கு பிறகு அவரை நம்பி இருக்கும் குடும்பம் அவர்கள் குழந்தைகள் என்ன ஆவார்கள் என்று யோசித்து பார்த்தீர்களா..இலவச பயணம் என்றால் நீங்கள் இந்த பேருந்தில் ஏறுகிறீர்கள் என்று தெரியாமல் கூட பேருந்து ஓட்டுனர் ஏதோ உள்ளுணர்வு மூலம் அறிந்து ஏற்றிச் செல்ல வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய அபத்தம் என்று யோசியுங்கள் என்று சொல்லி விளக்கம் தந்து இருக்கிறார்.. பிறகு அந்த பெண் இறங்கியவுடன் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் எனது சகோதரியிடம் வந்து மிகவும் உணர்ச்சிபூர்வமாக நன்றி சொல்லி இருக்கிறார்கள்.. இங்கே பெண்கள் எப்படி நடந்து கொண்டாலும் நியாயம் என்று சொல்பவர்களுக்காக இந்த பதிவை தருகிறேன்..

நியாய தர்மத்திற்கு ஆண் பெண் என்கின்ற பாகுபாடு கிடையாது..

இங்கே கூட ஆண்களை காப்பாற்ற பெண் தான் தேவைப்படுகிறார்.😌

#சர்வதேசஆண்கள்தினவாழ்த்துக்கள்.

#இளையவேணிகிருஷ்ணா.

3 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான கருத்து......... சகோதரி

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையான கருத்தை பதிவு செய்து உள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  3. மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 🙏😊🎻

    பதிலளிநீக்கு