பக்கங்கள்

செவ்வாய், 15 நவம்பர், 2022

அந்த பேரொளியின் தாபம்


 அந்த பேரொளியின்

தன்னலம் இல்லாத

வெளிச்சத்தில் மகிழ்ந்து

கொண்டாடி தீர்ந்த நொடியில்

அதன் தாபத்தை இங்கே

அடுத்து வந்த நொடியில்

புரிந்துக் கொண்டு

ஆழ்ந்த அமைதியில்

மௌனமாக கண்ணீர்

வடித்து கடந்து செல்கிறேன்..

என் கண்ணீருக்கு இங்கே

காதல் என்று போவோர் வருவோர்

சொல்லி செல்வதை பார்த்து

பலமாக சிரித்து வேகமாக

கடந்து செல்கிறேன் லாவகமாக 

அந்த தாபத்தை மட்டும்

எவருக்கும் சொல்லாமல்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக