பக்கங்கள்

சனி, 29 அக்டோபர், 2022

ஏன் சமுத்திரத்தின் அமைதி கெட வேண்டும்?

 


என்னுள் கனன்று கொண்டு

இருக்கும் அந்தவொரு

விஷயத்தை சமுத்திரத்தில்

கரைத்து நிம்மதி அடைகிறேன்..

சமுத்திரமும் அந்த விஷயத்தின்

வீரியத்தால் தகிக்கிறது என்பதை

என் கால்களை நனைத்து செல்லும்

அலைகளில் உணர்கிறேன்..

அந்தவொரு விசயத்தை

நான் கடந்து செல்ல

ஏன் சமுத்திரத்தின் அமைதியை

கெடுக்க வேண்டும்??

என்னுள் நானே கேட்டுக் கொண்ட

அந்த நியாயமான கேள்விக்கு

இங்கே யார் பதில் சொல்லக் கூடும்?

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக