பக்கங்கள்

சனி, 24 செப்டம்பர், 2022

பேச்சற்ற நாட்களின் அமிர்தம்


எவரோடும்

ஒரு நாள் அவன் பேசவில்லை...

எவரும் அவனோடு 

பேசவில்லை..

அந்த நாளின்

அமிர்தம் கொஞ்சம் கொஞ்சமாக

அவன் சுவைக்கிறான்..

வாழ்வின் சூட்சமம்

அவனுக்கு விளங்கியது...

பேச்சற்ற நாட்கள்

இங்கே கிடைப்பது அரிது

அப்படி ஒரு நாள்

என்னையும் தேடி வந்தது..

என்னோடு நீ பயணிக்க

தயாரா என்றது..

எந்த கேள்விகளும் இல்லாமல்

அதனோடு பயணிக்க

தொடங்கி விட்டேன்..

நானும் அமிர்தம் 

சுவைக்க வேண்டும் அல்லவா?

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக