பக்கங்கள்

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

காலமும் நானும் (1)

 

காலமும் நானும்:-

நான் கண்விழித்து பார்ப்பதற்காக காலம் வெகுநேரம் காத்திருந்தது.நான் மெதுவாக எனது ஆழ்ந்த தியானத்தில் இருந்து கண் விழித்து பார்த்தேன்.. காலம் அருகே வந்து என்ன அவ்வளவு பெரிய பிரார்த்தனை உனக்கு.. எப்போதும் நீ பிரார்த்தனையை விரும்புவது இல்லையே என்றது... ஆம் நீ சொல்வது சரிதான் காலமே.. நான் உனது விரலை பிடித்து நடக்கிறேன்..வாழ்வை போற போக்கில் உனது கரம் பிடித்து நடப்பதில் இருக்கும் நிம்மதி வேறு எதிலும் கிடைப்பது இல்லை..அதை நான் பல சமயங்களில் உணர்ந்து இருக்கிறேன் என்றேன்..

பிறகு ஏன் இந்த நீண்ட பிரார்த்தனை என்றது ஆச்சரியம் கலந்த குரலில்..

இந்த பிரார்த்தனை எனக்கானது அல்ல.. எனது பக்கத்து மற்றும் எதிர் வீட்டுக்காரர்களுக்காக என்றேன்..

காலம் ஒரு அழகான புன்னகையை உதிர்த்து வாழ்த்தியது..

நான் அந்த வாழ்த்து செய்தியை இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டு சமையலறைக்குள் சென்று இஞ்சி கலந்த தேநீர் கோப்பையோடு வந்து காலத்தின் கைகளில் ஒன்றை கொடுத்து விட்டு எனக்கொரு கோப்பையோடு அமர்ந்தேன்..

அங்கே சில 🐦 பறவைகள் வானில் சிறகடித்து மாலை வேளையில் தன் கூட்டை நோக்கி பறந்தது எல்லா வித அன்றைய கவலைகளை தன் சிறகுகளால் வானில் கலக்க விட்டு...

நான் கொஞ்சம் புன்னகைத்தேன்.. காலமும் என் எண்ணத்தை புரிந்து சிறு புன்னகை சிந்தி தேநீரை சுவாரஸ்யமாக பருகியது...

#காலமும் நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக