பக்கங்கள்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

நாட்குறிப்பும் எனது உணர்வுகளும்


ஆயிரம் ஆயிரம் 

விசயங்களை

மனம் யோசித்து 

வைத்திருக்கிறது...

எதை எழுதுவது

எதை விடுவது..

மேசையில் இருக்கும் 

நாட்குறிப்போ 

என் முகம் நோக்கி

ஆவலாக பார்க்க

நான் கொஞ்சம் தயங்கி 

எதையும் எழுதாமல் 

அதை அப்படியே மூடி வைத்து

எழுந்து விடுவதை பார்த்து

உன் உணர்வுகளை

என்னை தவிர எவர்

புரிந்துக் கொள்ள கூடும்?

உன் உணர்வுகளை

என்னிடம் கொட்டி விடு...

நான் நம்பிக்கை துரோகம்

செய்ய மாட்டேன்

நீ என்னிடம் சோகம் தீர 

பகிர்ந்த 

உன் உணர்வுகளை

அடுத்தவரிடம் தெரிவித்து 

என்றது...

அது சொன்னதில் பிழை ஏதும்

இல்லையே..

நம்பிக்கை என்பது

இந்த உலகில் 

நிலைக் குலைந்து கிடக்க 

எவரை நான் வடிகாலாக

நம்புவது

வேஷம் நிறைந்த உலகில்...

#இளையவேணிகிருஷ்ணா.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக