பக்கங்கள்

புதன், 24 ஆகஸ்ட், 2022

சலிப்பேறி நகரும் நொடிகள்


வாழ்வின் அர்த்தங்கள் என்று 

சொல்லப்படுவதெல்லாம் 

ஒரு கட்டத்தில் அர்த்தம்

இல்லாமல் 

உடைப்படுகிறது...

புகழ் எனும் போதையோ

ஏறி ஏறி இறங்கி

பாடாய்ப்படுத்தி கொல்கிறது..

எத்தனை எத்தனை நிகழ்வுகள்

நடந்தேறி விடுகிறது..

என் அனுமதி இல்லாமலேயே..

எது எப்படியாயினும்

சலிப்பேறி நகரும் நொடிகளை

இங்கே சகித்துக் கொண்டு

இருக்கும் கொடுமையை

அனுபவிப்பது போல

வாழ்வின் சுமை இங்கே 

வேறெதுவும் இருக்க முடியாது

என்பதை இங்கே நான்

உணரும் தருணத்தில்

ஆன்மாவின் ஆனந்தமான

அந்த சத்தம் இல்லாமல்

நகரும் நொடி

என் காதில் விழுகிறது..

#இளையவேணிகிருஷ்ணா.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக