பக்கங்கள்

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

பழி போடுவது எளிது... உண்மை வேறு..

 


பாராளுமன்ற விவாதத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய குற்றசாட்டை மேம்போக்காக பார்த்தால் திமுக மேல் சாதாரண மக்களுக்கு கோபம் வரும்.. ஆனால் அதை ஆழ்ந்து கவனிக்கும் போது தான் தெரியும்..அடடா இதில் இவ்வளவு விசயங்கள் உள்ளதா என்று.. அந்த குற்றச்சாட்டு இதுதான்.. நீங்களும் இணையதளத்தில் காணொளி மூலம் பார்த்து இருப்பீர்கள்..எதை எடுத்தாலும் ஜிஎஸ்டி வரியை காரணம் காட்டி திமுக மக்களை திசை திருப்புவதாக சொல்ல வருகிறார்கள்.. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் திமுகவும் இருந்து அந்த வரிகளுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் சொல்லி இருக்கிறார்..

இந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் விதத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் பதில் இருந்தது கவனிக்கத்தக்கது..

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு சாமானிய மக்களை பாதிக்கும் என்பதால் தமிழக அரசு எழுத்து பூர்வமாக தனது எதிர்ப்பைத் தெரிவித்து உள்ளது என்று சொல்லி இருக்கிறார்..

இதற்கு காரணமாக அவர் சொல்லி இருப்பது கவனிக்கத்தக்கது.#ஜிஎஸ்டிமன்றத்தின் #அடிப்படைகட்டமைப்பில் பல சிக்கல்கள் உள்ளன என்றும் இதில் மத்திய அரசுக்கு 33 சதவீத ஓட்டும் மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் தலா 2சதவீத ஓட்டும் உள்ளது.. பெரிய மாநிலமோ சிறிய மாநிலமோ ஒவ்வொரு மாநிலத்திற்கும் 2 சதவீத ஓட்டு மட்டுமே உள்ளது.. இப்படி உள்ள கட்டமைப்பில் ஜிஎஸ்டி வரியின் பரிந்துரை தடுக்க வேண்டும் என்றால் #ஏறத்தாழ #25மாநிலங்களின் #ஒருமித்த #ஆதரவு வேண்டும் இல்லையெனில் மத்திய அரசின் ஆதரவு வேண்டும் என்ற சட்ட சிக்கலை விளக்கியுள்ளார்..

இப்போது சொல்லுங்கள் யார் மேம்போக்காக பழி போடுகிறார்கள் என்று..

#ஜிஎஸ்டிநுணுக்கம்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக