பக்கங்கள்

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

இரக்கம் கொள்வதா நிராகரிப்பதா...

 

எனக்கும் எனது

மனதிற்குமான இடைவெளி

நானே நிர்ணயித்துக் கொண்டேன் 

ஏனோ அது என்னை விட்டு

விலக மறுக்கிறது...

எத்தனையோ நினைவுகளை

துறந்து நிச்சலனமான

பயணத்தை அமைதியாக

தொடர நினைக்கும் எனக்கு

நீ தொணதொணவென பேசி

வருவது பெரும் இடையூறு 

மனமே என்கிறேன்...

அதுவோ உன்னை நான்

எந்த தொந்தரவும் செய்யாமல்

பயணிக்கிறேன் என்று

ஒரு சிறு குழந்தையை போல

பிடிவாதம் பிடிக்கிறது ...

நான் இரக்கம் கொள்வதா

இல்லை நிராகரிப்பதா

புரியாமல் தவிக்கிறேன்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக