பக்கங்கள்

ஞாயிறு, 31 ஜூலை, 2022

அங்கே நடந்த நிகழ்வு...


 அங்கே என்ன நடக்கிறது

கொஞ்சமேனும்

அக்கறை இல்லாமல்

சலனமற்ற நிலையில்

நான் கடந்து செல்வதை பார்த்து

அங்கே சிலர் என்னை

விமர்சிக்கிறார்கள்..

அங்கே நடந்த நிகழ்வில் தான்

நான் சுக்குநூறாக

சென்ற பிறவியில் உடைந்து

இங்கே பிறவி எடுத்து

இருக்கிறேன் என்று

அவர்கள் அறிய

நியாயம் இல்லை தானே..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக