பக்கங்கள்

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

நேர்மறை எண்ணங்கள்

அன்புடையீர் வணக்கம்.
       இன்று நாம் பார்க்க இருப்பது நேர்மறை எண்ணங்கள். இன்று மனிதர்களிடையே நேர்மறை எண்ணங்களைவிட எதிர்மறை எண்ணங்களே அதிகமாக ஈர்க்கிறது. சமூக வளைத்தளத்தில் கூட நேர்மறை எண்ணங்களுக்கு கிடைக்கும் லைக்ஸைவிட எதிர்மறை எண்ணங்கள் சோகமான பதிவுகளே அதிக வரவேற்பை பெறுகிறது. அதை நீங்களே கூட கவனித்து இருக்கலாம். அதை தவறு என்று கூட சொல்லமுடியாது.ஏனெனில் இந்த உலகில் வாழ்வில் எந்த மூலைக்கு போனாலும் மனிதர்கள் தங்கள் உறவினர்களாலோ அல்லது சமூகத்தாலோ அல்லது நண்பர்களாலோ ஏமாற்றப்படுகிறார்கள்.அதனால் தான் அவர்கள் அந்த எதிர்மறை எண்ணங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களை அதிகமாக விரும்புகிறார்கள்.அட நம்மை போல தான் இவர்களும் என்று.
       ஆனால் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எப்போதுமே மனம் எதை அதிகமாக உள்ளே அனுமதிக்கிறதோ அதை அப்படியே உள்ளே  ஆழமாக புதைத்து கொள்ளும்.அதனால் எதிர்மறை எண்ணங்களை அதிகமாக உள்ளே அனுமதிக்காதீர்கள்.
    ஒரு காரியத்தை எடுத்து பல்வேறு தடங்கல் வந்தாலும் அதை எதிர்த்து சமயோசிதமாக அதை கையாள வேண்டுமேயொழிய அதற்காக சோர்ந்து உட்காரக்கூடாது.அப்போது அந்த காரியத்தை விட்டு விடலாமா என்று தான் மனம் யோசிக்கும். இது எதிர்மறை எண்ணம். இதை நாம் கண்டிப்பாக மனதில் இருந்து தூக்கி எறிய வேண்டும்.
   நம்மிடம் பேசுபவர்கள் எதிர்மறை எண்ணங்கள் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களை நமது நேர்மறை எண்ணங்களை நோக்கி திருப்ப வேண்டுமேயொழிய நாம் அவர்களின் எதிர்மறை எண்ணங்களுக்கு பலியாகிவிடக்கூடாது.இதில் நாம் எப்போதும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
    அதிகாலையில் எழுங்கள்.உற்சாகமான சொற்களை உங்கள் மனதிற்கு நீங்களே சொல்லி கொள்ளுங்கள். இன்று ஏதோவொரு புதிய காரியத்தை நாம் தொடங்கி சாதிக்க போகிறோம் என்று நினையுங்கள். அல்லது ஏற்கனவே தொடங்கிய காரியம் நல்லபடியாக முடியபோகிறது என்று உற்சாகமாக நாளை தொடங்குங்கள்.
    எந்த நேரமும் நீங்கள் சோர்வடையாதீர்கள். போதிய ஓய்வு  எடுத்துக்கொண்டு மீண்டும் வேலைகளை உற்சாகமாக செய்யுங்கள்.நம்மை விட்டால் இந்த வேலையை செய்ய இங்கு வேறு எவருமே இல்லை என்று உத்வேகம் கொள்ளுங்கள். அப்போது தான் நீங்கள் அதிக நேர்மறை அதிர்வலைகளை பெறுவீர்கள்.
    எப்போதுமே உற்சாகமாக இருப்பவர்களை சுற்றி ஒரு நல்ல அதிர்வலைகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இந்த அதிர்வலைதான் இவர்களை காக்கும் பொன்வளையம் என்றே சொல்லலாம்.
   நேர்மறை எண்ணங்கள் கடுமையான நோயை கூட குணபடுத்திவிடுகிறது என்று பல ஆய்வுகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து உள்ளார்கள்.அதனால் தான் நானும் உங்களிடம் இதை வலியுறுத்தி கூறுகிறேன்.
         அன்பர்களே நீங்கள் எந்த அளவுக்கு நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்கிறீர்களோ நேர்மறை எண்ணங்கள் உள்ளவர்களிடம் பழகுகிறீர்களோ அந்தளவிற்கு நீங்கள் நினைத்து பார்க்க முடியாத சாதனைகளை படைப்பீர்கள்.இது நிச்சயம். அதனால் நீங்கள் இப்போதில் இருந்து இந்த எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள்.
  சரி நேயர்களே!நேர்மறை எண்ணங்கள் மூலம் நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்று வாழ்த்துக்கள் கூறி உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.மீண்டும் ஒரு நல்ல பதிவில் நான் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து தற்காலிகமாக பிரிகிறேன்.மீண்டும் சந்திப்போம். நன்றி. வணக்கம்.🙏👍🖐️🖐️🖐️.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக