பக்கங்கள்

செவ்வாய், 23 அக்டோபர், 2018

கலை

அன்பர்களே வணக்கம்.
   நாம் சந்தித்து வெகுகாலம் ஆகிவிட்டது. அனைவரும் அந்த இறைவன் அருளால் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.🙂🙏
       நாம் தற்போது பார்க்க இருப்பது கலை.இந்த உலகில் இறைவன் படைப்பில் நாம் பார்க்கும் அனைத்தும் ஒருவித கலைதான். ஆனால் என்ன நாம் இறைவன் அருளால் இருக்கும் அனைத்து படைப்புகளையும் கலையாக ரசிக்க நேரம் இல்லாமல் அலைகிறோம்.அதுதான் நமது ஒரே குறை.அதனால் என்ன நமது மனப்பான்மையை நாம் மாற்றிக்கொண்டால் ஆயிற்று.
       நாம் தினமும் அலுவலகத்திற்கு ஒருவித பரபரப்போடு செல்கிறோம். மீண்டும் வீட்டுக்கு வருகிறோம்.இதுதான் நமது தினசரி கடமையாக வேலையாக இருக்கிறது. மாறிவரும் வாழ்வியல் சூழலில் நாம் இதற்கு பழக்கப்படுத்திக்கொண்டதால் நமது மனம் சோர்வடைகிறது.உண்மையில் இறைவன் நம்மை நல்ல நோக்கத்திற்காக படைத்துள்ளான் என்பதை நாம் நம்ப வேண்டும். அதை நமது மனமும் உணர செய்ய வேண்டும். அப்போது தான் நாம் மனசோர்வில் இருந்து விடுபட இயலும். நாம் வாழும் வீடு முதலில் சிறியதாக இருந்தாலும் புழக்கடை என்று ஒன்று வீட்டின் பின்புறத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் நான் சொல்ல வந்த வாழ்க்கை கலை என்ன என்பதை தங்களால் புரிந்து கொள்ள முடியும்.
     நாம் ஒரு வேலைக்கு செல்வது நமது அடிப்படை தேவைகளை பூர்த்திச் செய்து கொள்வதற்காக தான்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்?.அதிலேயே நமது வாழ்க்கையை தொலைத்து விட்டு இறைவன் படைத்த பூமியில் உள்ள கலைகளை ரசிக்க மறந்து விடுகிறோம்.
   இந்த உலகில் கடல்,வானம், மரங்கள், சோலைகள் ,மலைகள், ஆறுகள், அருவிகள்,சூரியன், சந்திரன், நட்சத்திர கூட்டம்,மேகம்,மழை,தூறல், பூக்கள், புல்வெளி,......இப்படி எல்லாமே நாம் ரசிக்க தான். ஆனால் நாம் என்ன செய்கிறோம்?.அனைத்தையும் கலையாக பார்க்காமல் வெறுக்கிறோம்.மேலும் அதை ரசிக்க தெரியாமல் நமது பேராசையால் இறைவன் கொடுத்த இந்த கலைப்பொக்கிஷங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க துணிந்துவிட்டோம்.இப்போது நடக்கும் இயற்கை பேரழிவிற்கு தயைகூர்ந்து இயற்கையை திட்டி தீர்க்காதீர்கள்.இதெல்லாம் நாம் கடந்த காலத்தில் இப்போது செய்து கொண்டு இருப்பதற்கு எதிர்வினை என்பதை நாம் புரிந்து கொண்டு இனிமேலாவது இயற்கையை பழைய நிலைக்கு கொண்டு வரமுயலுவோம்.அதற்கு கண்டிப்பாக நிறைய காலம் பிடிக்கும். நிறைய பொறுமை அவசியம்.
  ஒருகாலத்தில் நாம் ரசித்த இயற்கை இன்று நம்மை மிரட்டிக்கொண்டு இருப்பதாக நினைக்கிறோம்.உண்மையில் இயற்கை நம்மை ஏன் மிரட்ட வேண்டும்?.கொஞ்சம் யோசித்து பார்ப்போம். இனியாவது நாம் இறைவன் படைத்த பொக்கிஷமான கலைகளை நாம் நிச்சயமாக ரசித்து நமது சந்ததிகளுக்கு விட்டு செல்ல வேண்டும். என்ன நேயர்களே!நாம் ஒரு அடியாவது எடுத்து வைக்க முயற்சி செய்வோமா?.
      இயற்கையை நேசிப்போம்!இறைவனையும் நேசிப்போம்!கலைகளை பாதுகாப்போம்!🙏👏👍
   நேயர்களே மீண்டும் ஒரு பதிவில் நான் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.உங்கள் அன்பான ஆதரவுக்கு எப்போதும் நான் தலை வணங்குகிறேன்.எனது எழுத்தை ரசிக்க இவ்வளவு ரசிகர்களா என்று நான் வியந்து அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.மிகவும் நன்றி.🙏🙏🙏🙏🙏🖐️🖐️🖐️🖐️👏🤝

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக