பக்கங்கள்

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

உரிமைகளும் கடமைகளும்

அன்பர்களே வணக்கம்.
           இப்போது நாம் பார்க்க இருப்பது உரிமைகளும் கடமைகளும்.முதலில் நாம் உரிமைகள் என்றால் என்ன கடமைகள் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். உரிமைகளும் கடமைகளும் ஒரு நாணயத்தின் இருபகுதிகள் போன்றது.ஒன்றை விட்டு ஒன்றை பிரித்து பார்க்க முடியாது.
            உரிமைகள் என்றால் என்ன. அது நான் விளக்காமலே உங்களுக்கு விளங்கி இருக்கும். அதாவது நமக்கு தேவையானதை நமக்கு உரிமை உள்ள எந்த வஸ்துவும் நமது உரிமை. அதாவது நாம் அதற்கு எஜமான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.நாம் அதன் மேல் ஆதிக்கம் செலுத்த முடியும். அதுதான் உரிமை. இந்த உரிமைகள் என்பது நமது கல்வி பேச்சு எழுத்து சமுதாய சீர்திருத்தம்... இப்படி எதன் மீது வேண்டும் என்றாலும் இருக்கலாம். ஆனால் நமது உரிமையை நாம்  சரியான நேரத்தில் சரியான இடத்தில் பயன்படுத்துகிறோமா என்பது தான் பிரச்சினை. நமது உரிமையை ஒழுங்காக பயன்படுத்தி வரும் போது நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அதை தவறாகபயன்படுத்தினால் நாம் கண்டிப்பாக கேவலப்பட்டு நிற்போம்.
       சரி இப்போது கடமைகள் என்ன என்று பார்ப்போம். கடமைகள் என்பது நாம் உரிமை எடுத்துக்கொள்கிறோமே அங்கே தான் தொடங்குகிறது.நாம் எந்த பொருளில் வஸ்துவில் உரிமை எடுத்து கொள்கிறோமோ அந்த பொருளில் வஸ்துவில் பாலில் நெய் போல கடமையும் கலந்து உள்ளது.
         நாம் பெரும்பாலும் உரிமை எடுத்துக்கொள்கிற அளவிற்கு கடமையை செய்ய தவறிவிடுகிறோம்.இதில் தான் பிரச்சினை ஆரம்பம் ஆகிவிடுகிறது.
பேச்சுரிமை எடுத்து கொள்கிறோம் சரி.ஆனால் நாம் பேச்சுரிமை எடுத்து கொண்ஞ அளவிற்கு நாம் பேசும் பேச்சின் படி நடந்து கடமை ஆற்றுகிறோமா என்பது கேள்வி குறிதானே அன்பர்களே.
           கல்வி உரிமை எடுத்து கொள்கிறோம். ஆனால் நாம் கற்றக்கல்வி சொல்லி தந்தப்படி நடக்கிறோமா என்று ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் படிப்பதற்கும் செயல்களுக்கும் இடைவெளிகள் அதிகம். நாம் படித்த படி நடப்பது தானே நமது கடமை.ஆனால் உரிமையை எடுத்து கொண்டு கடமையை அனாதையாக்கிவிடுகிறோம்.இது நியாயம் தானா அன்பர்களே.சுயமாக சிந்தித்து பார்ப்போம் .
          நாம் எவ்வளவோ விசயங்களை எழுதுகிறோம்.ஆனால் நாம் எழுதிய விசயங்களை நாம் கடைப்பிடிக்கிறோமா என்று கேட்டால் நிச்சயமாக பெரும்பாலானவர்கள் பதில் இல்லை என்றே சொல்லும். நமது எண்ணமும் செயலும் எப்போது ஒன்றுப்பட ஆரம்பிக்கிறதோ அப்போது தான் நாம் நமது உரிமையும் கடமையும் நிறைவேற்றுபவர்களாக ஆவோம்.
       நாம் நமது வீட்டில் இருந்தே துவங்க வேண்டும்இதற்கான வேலைகளை.நமது வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு நாம் இதைப்பற்றி தெளிவாக சொல்லி கொடுக்க வேண்டும். உரிமைகளை மட்டும் சொல்லி கொடுக்கிறோம்.கடமைகளை சொல்லி கொடுக்க மறக்கிறோம்.அதனால் தான் இன்று பல முதியவர்கள் முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள். இது நாம் கடமைகளை ஞாபகப்படுத்தாததன் விளைவு.மேலும் நம் பெண்பிள்ளைகளுக்கு இது முக்கியமாக கற்று கொடுக்க வேண்டும்.
              ஏனெனில் புகுந்த வீட்டில் போய் எல்லா உரிமைகளையும் எடுத்துக்கொள்ள சொல்கிறோம். ஆனால் எடுத்து கொண்ட உரிமைகளுக்கு பதிலாக கடமைகளை செய்ய சொல்லி நாம் சொல்லித்தருவதில்லை.அதனால் தான் பெரும்பாலான குடும்பங்கள் இன்று நீதிமன்றம் ஏற வேண்டிய சூழ்நிலை .
          உரிமைகளை விட கடமைகளுக்கு நிறைய முக்கியத்துவம் தரும் போது உரிமைகள் தானாகவே வந்து சேரும்.நாம் நமது அகங்காரத்தை விடுத்து உரிமைகளையும் கடமைகளையும் பார்த்தால் தெரியும். நடுநிலையோடு எதையும் அணுகினால் நமது உரிமைகளும் கடமைகளும் நமக்கு நிச்சயமாக புரிய வரும்.
     என்ன நேயர்களே உரிமைகளையும் கடமைகளையும் புரிந்து கொண்டீர்கள். அப்படி தானே.இன்னும் என்ன தயக்கம். புரிந்து கொண்டதை செயல்படுத்திவிட வேண்டியதுதானே.ஆனந்தமான வாழ்க்கை வாழ நமக்கு அது நிச்சயம் வழிக்காட்டும்.சரி நேயர்களே மீண்டும் மற்றொரு சந்திப்பில் வேறொரு தலைப்பில் நாம் சந்திப்போம்.அதுவரை🖐️🖐️🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக