பக்கங்கள்

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

இடைவெளி

அன்பர்களே வணக்கம்.
         நாம் இன்று பார்க்க இருப்பது இடைவெளி.நீங்கள் இடைவெளியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?.உங்களுக்கு எங்களிடம் கேள்வி கேட்காமல் எந்த பதிவும் போட தெரியாதா?என்று முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. என்ன செய்வது. உங்களிடம் கேள்வி கேட்டு அந்த இடைவெளியில் நான் சிந்தனை செய்து பதிவு போடலாம் என்று தான் அன்பர்களே.நான் போடும் பதிவுகளை பற்றி தாங்கள் அனைவரும் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு தெரிகிறது. இது ஏதோ எழுதுகிறேன் பேர்வழி என்று நம்மை கிறுக்கர்கள் ஆக்கி விடுமோ என்று நீங்கள் எண்ணுவதும் எனக்கு தெரிகிறது. ஆனால் நீங்கள் அனைவரும் என் எழுத்துக்களை ரசித்து தான் ஆகவேண்டும். வேறுவழி இல்லை. ஏனெனில் உங்கள் அன்பு அப்படி பட்டது.
      சரி நேயர்களே நான் தற்போது விசயத்திற்கு வருகிறேன். எந்த ஒரு விசயத்திலும் இடைவெளி மிகவும் முக்கியம் ஆனது.நாம் சாலையில் வாகனத்தில் செல்கிறோம்.சிறிது இடைவெளி விட்டு பின்தொடரவும் என்ற வாசகம் நம் கண்களில் படுகிறது. அது ஏன்?நமது பாதுகாப்புக்கு தானே.அதுபோல வாழ்க்கையில் சில விசயங்களில் நாம் இடைவெளியை பின்பற்றி தான் ஆக வேண்டும்.
   நமது உறவுகளில் கூட நாம் இடைவெளியை பின்பற்றினால் தான் அந்த உறவு இறுதி வரை இருக்கும். இது சில உறவுகளில் நாம் கடைப்பிடித்தே ஆக வேண்டும். இல்லை என்றால் நாம் தேவையில்லாத சங்கடங்களில் மாட்டிக்கொள்ள நேரும்.
      நாம் பேசும் பேச்சில் கூட இடைவெளியை பின்பற்ற வேண்டும். தொடர்ந்து நீங்கள் பேசினால் சோர்ந்து விடுவீர்கள்.
    செய்யும் வேலைகளுக்கிடையே இடைவெளி வேண்டும். தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருந்தால் உடல் சோர்வடையும்.அதனால் நாம் மனதளவில் கூட பாதிப்படைவோம்.
       ஏன் வயலில் விவசாயம் செய்யும் போதுகூட நீங்கள் தொடர்ந்து அந்த நிலத்திற்கு ஓய்வு கொடுக்காமல் இடைவெளி இல்லாமல் பயிரிட்டால் நீங்கள் இலாபம் அடைவதற்கு பதிலாக நஷ்டம் தான் அடைவீர்கள். ஏனெனில் விளைச்சல் குறையும்.
       ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் இடைவெளி வேண்டும். அப்போது தான் அந்த இரண்டு வேலைகளுமே நன்றாக அமையும்.
      இடைவெளியை சரியாக பயன்படுத்தி கொண்டவர்கள் வாழ்க்கையில் நிம்மதியாக ஆனந்தமாக வாழ தெரிந்தவர்கள்.இடைவெளி என்பது நமக்கு கிடைத்த வரம்.
       இடைவெளி இன்பத்தை தரும். காலத்தை நாம் ரசிக்கிறோம்.ஏனெனில் ஒவ்வொரு வெயில் காலத்திற்கும் பனிகாலத்திற்கும் மழைக்காலத்திற்கும் சமமான இடைவெளி இருப்பதால் தான் நாம் காலத்தை ரசிக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலம் பிடிக்கும். அனைவரையும் இங்கே திருப்தி செய்வது எது?.சொல்லுங்கள் நேயர்களே.இடைவெளி தானே.
    வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைத்து விசயங்களும் இடைவெளி விட்டே நடப்பதால் தான் நாம் நிம்மதியாக இருக்கிறோம்.
  கிரகங்கள் அதற்குரிய இடைவெளியில் வானவெளியில் சுற்றுவதால் தான் நாம் இங்கே சுவாரஸ்யமான சம்பவங்களை சந்திக்கிறோம்.
  ஆக நேயர்களே இப்போது புரிகிறதா இடைவெளியின் அவசியத்தை. இடைவெளியின் அவசியத்தை நாம் உணர்ந்து கொண்டால் நாம் இங்கே ஆனந்தமாக வாழலாம்.
   சரி நேயர்களே. மீண்டும் ஒரு வித்தியாசமான பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.அதுவரை🖐️🖐️🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக