பக்கங்கள்

திங்கள், 16 ஜூலை, 2018

தியாகம்

அன்பர்களே வணக்கம்.
இன்று நாம் பார்க்க இருப்பது தியாகம். தியாகம் என்றால் என்ன?நாம் எந்தவித பிரதிபலனும் பாராமல் வேலை செய்வது.உண்மையில் நம்மை அப்படி தான் வளர்த்தார்கள் நம் பெற்றோர்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. சின்ன குழந்தையிடம் கூட நாம் எதிர்பார்ப்பு என்ற நஞ்சை விதைக்கிறோம்.இது சரிதானா.
  உண்மையில் அந்த காலத்தில் குழந்தைகளிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வளர்த்ததால் தான் நம்மால் நமக்குள் இருக்கும் திறமையை நிரூபிக்க முடிந்தது.
    ஆனால் இன்று நம் குழந்தைகள் நாம் ஆட்டிவைக்கும் பொம்மைகள் ஆக்கி விட்டோம். ஏன் இந்த நிலைமை.எந்த பள்ளியில் சேர வேண்டும் எந்த கல்லூரியில் சேர வேண்டும் எந்த படிப்பு படிக்க வேண்டும் என்று நாம் தீர்மானிக்கிறோம்.இது முற்றிலும் தவறானது.ஒரு கட்டத்தில் குழந்தைகள் முடிவெடுக்கும் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து எல்லாவற்றிற்கும் மற்றவர்களை சார்ந்து வாழ பழகிவிடுவார்கள்.
    இதைத்தான் பெரும்பாலான பெற்றோர்கள் ஊக்குவித்து சமயோசித புத்தி இல்லாமல் செய்து அவர்களை ரோபோ ஆக்கி விடுகிறார்கள். அப்படி சொல்வது கூட தவறு.ரோபோ கூட சில சமயம் சிந்திக்கிறது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இதில் பெருமை வேறு.என் பிள்ளை என்னை கேட்காமல் எதையும் செய்ய மாட்டான் என்று. அவனுக்கு சிந்திக்க தெரியவில்லை. முடிவெடுக்க தெரியவில்லை. அப்போது உங்களிடம் தானே வருவான். இதில் என்ன பெருமை.
   பெற்றோர்களே தயவுசெய்து நீங்கள் பிள்ளைகளை உங்கள் முடிவுகளை திணித்து கட்டுப்படுத்தாதீர்கள்.அவர்களுக்கு வழிகாட்டியாக மட்டும் இருங்கள். நல்லது கெட்டது சொல்லி தாருங்கள். ஆனால் முடிவுகள் மட்டும் அவர்கள் எடுக்கட்டும்.
இன்றைய சிந்தனை பற்றி தங்கள் கருத்துக்களை பதிவிடவும்.நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக