பக்கங்கள்

புதன், 18 ஜூலை, 2018

தனிமனித ஒழுக்கம்

அன்பர்களே வணக்கம்.
இன்று நாம் பார்க்க இருக்கும் முக்கியமான விசயம் தனிமனித ஒழுக்கம். இன்று நாம் எந்த விதமான சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று பார்த்தால் மிகவும் அருவருப்பாக உள்ளது. எப்படி நாம் இப்படி மாறிபோனோம் என்றே நமக்கு தெரியவில்லை. நாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிஇருக்கிறோம் என்பதே உண்மை.
  நம் பாரதத்தை பார்த்து ஒருகாலத்தில் அனைவரும் பொறாமைக்கொண்டார்கள்.ஆனால் இன்று நாம் அந்த நிலையை சிதைத்து விட்டோம்.நம் கைகளுக்குள் உலகம் அடங்கிவிட்டது என்பது உண்மை தான். ஆனால் நமது பாரம்பரியம் நமது கலாச்சாரம் எங்கே?.
நாம் நாமாக நிச்சயமாக மாறவில்லை என்பதே உண்மை. இந்த அரசியல்வாதிகள் மக்களை மூளைசலவை செய்து மாற்றி விட்டார்கள். நான் நிச்சயமாக சொல்வேன் நமது அரசியல்வாதிகளும் ஒருவகையில் தீவிரவாதிகளே.இன்னும் சொல்ல போனால் தீவிரவாதிகளைகூட நாம் ஏற்றுக்கொள்ள முடியும். எப்படி என்றால் அவர்கள் கொள்கை விசயத்தில் மிகவும் தெளிவாக இருப்பதால்.
  ஆனால் இந்த அரசியல்வாதிகள் நம்மை நம்பவைத்து கழுத்தறுக்கும் மோசமான தீவிரவாதிகள். தீவிரவாதிகளுக்கு எந்த சட்டம் பொருந்துமோ அதுவே இந்த அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். இவர்கள் அடிப்படை கொள்கை மக்களின் செல்வத்தை பொது சொத்தை கொள்ளையடிப்பதுதான்.
  தனிமனிதர்களே நீங்கள் உங்கள் ஒழுக்கத்தை தூக்கி போட்டு நீங்கள் வாழும் சமுதாயத்தை கேவலமாக்கிக்கொண்டு இருப்பது உங்களுக்கு தெரிகிறதா.நாளை உங்கள் சந்ததி இதே பூமியில் தான் வாழ போகிறார்கள். அவர்கள் உங்கள் வரலாறை நீங்கள் வாழ்ந்த சமுதாய வாழ்வை பார்த்து சிரிக்க மாட்டார்களா?.உங்கள் மரியாதை கலாச்சாரத்தை நினைத்து அவர்கள் பெருமைக்கொள்வதற்கு பதிலாக சிறுமை கொள்வார்கள்.
   உங்களிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எந்த சூழ்நிலையிலும் ஒழுக்கத்தை கைவிடாதீர்கள்.நீங்கள் சேர்த்து வைத்த மற்ற சொத்துகளைவிட ஒழுக்கமே எந்த சூழலிலும் உங்கள் பெருமையை உணர்த்தும். உங்கள் பிள்ளைகள் வேண்டும் என்றால் நீங்கள் சம்பாதித்த சொத்திற்காக பெருமைக்கொள்வார்கள்.ஆனால் சமுதாயம் நீங்கள் சேர்த்த சொத்தை வைத்து உங்களை எடைப்போடாது.நீங்கள் சம்பாதித்த புகழை வைத்துதான் எடைப்போடும்.நீங்கள் சம்பாதித்த நல்ல பெயரை வைத்துதான் எடைப்போடும்.
  உங்கள் புகழுக்கு உங்கள் ஆன்மாவிற்கு கலங்கம் விளைவிக்கும் எந்தவித செயலையும் செய்யாதீர்கள். உங்கள் வாழ்க்கை என்பது மிகவும் அற்புதமானது.அதை உங்கள் மோசமான செயல்களால் தயவுசெய்து வீணடித்துவிடாதீர்கள்.
     எப்போதும் அழகான பூஞ்சோலைகள் நிறைந்த வழிதடம் இருபக்கமும் நம்மை ஆசீர்வதிக்க மோசமான முள்நிறைந்த பாதையை தேர்ந்தெடுப்பது நமக்கு எவ்வளவு இன்னலை கொடுக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் வீரர்கள் தான். அதறகாக உங்கள் நடவடிக்கைகளால் உங்கள் குடும்பத்தையும் சந்ததியையும் பழிகொடுத்துவிடாதீர்கள்.
      நீங்கள் ஆனந்தமான வாழ்க்கை வாழ இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக